Saturday, October 17, 2009

இன்று தீவாளி..

இன்று(10/17/2009)
தீபாவளி..
இருபது வருடங்களுக்கு முன்னால்
அந்த
அய்ப்பசி மாத
அடை மழை நாட்களை
உணர்ந்து பார்க்கிறேன்..

ஒரு வாரத்திற்கு முன்னரே
ஊர் களைகட்டும்.
இந்த வருட தீவாளிக்கு
எனக்கு சிதம்பரத்திலிருந்து
சிலுக்கு சட்டையும்
காட்டுமன்னார்கோவிலிலிருந்து
கால் சட்டையும் வரும் - உனக்கு
என்ன வரும் - என
பள்ளி நண்பர்களின்
பரிகாசம் ஆரம்பிக்கும்.

இந்த வருடமாவது
சீருடை அல்லாத
எந்த புது துணியும்
ஏற்றுக்கொள்ள கூடியதே
என மனம் விம்மும்.

என் அன்பிற்குரிய
அலமேலு ஆயாதான்
இந்த கால 'சாண்டாகிளா' சின்
சரி நிகர் சமானி.
அலமேலு - என்
அம்மா வழிப்பாட்டி.
ஆனால் - அம்மாவிற்கு மேல்
வளர்த்தார் எங்களை
சீராட்டி..!

அரசுப்பேருந்தில் அவர்
எப்போ வருவார் - என
வழி மேல் முழி வைத்து
காத்திருப்போம்.!
வருவார் சும்மா
மகாராணி போல்
நடந்து வருவார்.
மூட்டையை பிரித்து ஒவ்வொன்றாக
எடுத்து கொடுப்பார்.
அடுத்து என்ன வரும்
என்னோடது வருமா - என்ற
ஏக்கம் நிறைந்த அந்த மன
உணர்ச்சி - அதற்கு பிறகு
எனக்கென்ற அந்த உடையும் பட்டாசு
வெடியும் கிடைக்கும் போது
உண்டாகும் மன கிளர்ச்சி - இன்று
எவ்வளவு பொருள் ஈட்டினாலும்
கிடைப்பதில்லை. - இந்த கால
குழைந்தைகளுக்கும் கிடைப்பதில்லை
என்றே கருதுகிறேன்.

அடுத்து அம்மா
முறுக்கு சுடும் போது
விறகு அடுப்பில் - தீ அதிகம்
படமால் இருக்க விறகை வெளியில்
இழுக்க வேண்டும் - இதை
யார் செய்வதென்று எங்களுக்குள்
சகோதர யுத்தமே ந்டக்கும்.





<< Home

This page is powered by Blogger. Isn't yours?