Saturday, October 24, 2009

சான் ஃபிரான்சிச்கோ வளை குடா தமிழ் மன்றம் வழங்கும் பொன்னியின் செல்வன் - நாடக வடிவில்

தமிழ் மன்றம் வழங்கும் பொன்னியின் செல்வன் நாடகம் வரும் நவம்பர் எட்டாம் நாள் மேடையேற்றப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வில் என்னுடைய சிறு பங்களிப்பும் இருப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.
மேலதிக விவரங்களூக்கு இங்கே சொடுக்கவும்.

இளவரசர் ஆதித்த கரிகாலரின்
ஆருயிர் நண்பனாய்
தன் கயல்விழியால்
எதிரியின் வாள் முனையை
மழுங்கடிக்கும் பேரழகி
நறுமுகையாள் நந்தினியின்பால்
மையல் கொண்டு
மண்டியிடும் பார்த்திபேந்திர பல்லவனாய்
நான் - பரிமளிக்கும் காட்சியை
காண வாரீர்.வாரீர்..!
அனுமதி இலவசம் - என
அறிவிக்க ஆசைதான் - என்ன செய்ய
கட்டமைப்பு வசதி செய்ய
கட்டணம் கட்டாயமாகிறதே.!


<< Home

This page is powered by Blogger. Isn't yours?