Tuesday, June 23, 2009
தேர்தல் - என் முதல் கவிதை
இது அச்சில் வந்த என் முதல் கவிதை(!) , எண்பதுகளின் இறுதியில் எழுதியது.
இருண்ட தெருக்களுக்கு
விடிவு வந்தது
மண் சாலைகள் தார் போர்வை
போர்த்திக் கொண்டன
குடிசைக்குள் குழல் விளக்குகள்
நுழைந்தன
ஓ..
நாளை தேர்தல் வருகிறதோ.?